திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நூறு(100)-பேர் பெளத்தம் தழுவும் விழா ஏப்ரல் 5 நடைபெறுகிறது

பாபாசாஹிப் டாக்டர் *B.R.அம்பேத்கர்* அவர்களின் பிறந்த தின விழாவை முன்னிட்டு வருகின்ற *05/04/2023* அன்று மாலை *4* மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், *போளூர்*, சனிக்கவாடி, அம்பேத்கர் நகரில் மக்கள் புரட்சி கழகம் கட்சி நிறுவனர்-தலைவர் அண்ணன் *மா.ப.வர்கீஸ்* BA LLB அவர்களின் தலைமையில் தென்னிந்திய புத்த விஹார் உபாசகர்கள் அண்ணன் *பெளத்தஜெயபால்*, அண்ணன் *வினாயகம்* அவர்களின் முன்னிலையில் வணக்கத்துக்குரிய பிக்கு *புத்தபிரகாஷ்* அவர்கள், பிக்கு *பதண்டநாகராஜ்* அவர்கள் மற்றும் வணக்கத்துக்குரிய பிக்குனிகள் *தீபம்மாள்சுந்தரி, அமராவதி, தமிழ்கோவை,* அவர்கள் *நூறு(100)* பேருக்கு தீட்சை வழங்குகிறார்கள்.

இதில் பெளத்த சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், மக்கள் புரட்சி கழகம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெளத்த உபாசகர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *