சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு…

Chennai G20 : காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாட்டில், உலக பொருளாதாரம், எரிசக்தி துறை மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

நடப்பு 2023-ம் ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10-தேதிகளில் டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 200 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சென்னையில் ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு தொடங்கியுள்ளது.

இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஜி-20 நாடுகள் மற்றம் உறுப்பு நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், உலக பொருளாதாரம், விலை வாசி உயர்வு உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *