இடிந்து விழும் நிலையில் 25 ஆண்டுகால தொகுப்பு வீடுகள்; ஏழை மக்களின் நலனை கருத்தி உடனடி வீடு வழங்க பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கை.!

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாண்டூர் ஊராட்சி அரளி கிராமத்தில் சுமார் 25ஆண்டுகளுக்கு முன் 30 மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிய தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமான நிலையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இதுவரையில் கண்டு கொள்ளாத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் புதிய வீடு ஒதுக்கித் தருமாறு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் இதில் மாவட்ட பொது செயலாளர் கண்ணன் உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம் தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம் தொகுதி பொருளாளர் அறிவுசெல்வம், திருநாவலூர் ஒன்றிய தலைவர் ஏழுமலை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு கோரிக்கை வைத்து அனைவருக்கும் வீடு கட்டுவதற்கான நிலையை உருவாக்கி தருவோம் என உறுதி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *