58 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய தனுஷ்கோடி தரைப்பாலம்; இதனை கான குவியும் சுற்றுப்பயணிகள்..!

ராமே­சு­வரம்: கடந்த 58 ஆண்­டு­களுக்கு முன்பு கட­லில் மூழ்­கிய தனுஷ்­கோடி தரைப்­பா­லம் வெளியே தெரிந்­தது. இதை­ய­டுத்து, அங்கு சுற்­று­லாப் பய­ணி­க­ளின் வருகை அதி­க­ரித்­துள்­ளது.அனை­வ­ரும் மிகுந்த ஆர்­வத்­து­டன் அங்கு புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொள்­வ­து­டன், தரைப்­பா­லம் தெரி­வ­தைக் காணொ­ளி­யா­க­வும் பதிவு செய்­கின்­ற­னர்.ராமே­சு­வ­ரத்­தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்­டர் தூரத்­தில் அமைந்­துள்ள தனுஷ்­கோடி, கடந்த 1964ஆம் ஆண்டு வரை பர­ப­ரப்­பான தொழில் நக­ர­மாக விளங்கி வந்­தது.இலங்­கை­யின் தலை­மன்­னார் பகு­திக்கு தனுஷ்­கோ­டி­யில் இருந்து போக்­கு­வ­ரத்­துக் கப்­பல்­களும் ரயில்­களும் இயக்­கப்­பட்­டன. வளர்ந்த நக­ருக்­கு­ரிய வகை­யில் மருத்­து­வ­மனை, துறை­மு­கம், தபால் நிலை­யம், கோவில்­கள், பள்­ளி­கள் என அனைத்து வச­தி­களும் தனுஷ்­கோ­டி­யில் இருந்­தன.இந்­நி­லை­யில், 1964ஆம் ஆண்டு டிசம்­பர் 23ஆம் தேதி வீசிய புய­லில் ஒட்­டு­மொத்த தனுஷ்­கோடி நக­ர­மும் அழிந்­து­போ­னது. புய­லுக்­குப் பின்­னர் அது மக்­கள் வாழ முடி­யாத பகு­தி­யாக மாறி­விட்­டது என இந்­திய அரசு அறி­வித்­தது.மீன­வர்­கள் சிலர் அங்கு குடி­சை­கள் அமைத்து வசித்து வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், புய­லில் மூழ்­கிப்­போன தரைப்­பா­லம் ஒன்று தனுஷ்­கோ­டி­யில் மீண்­டும் தென்­படு­கிறது.இந்­தப் பாலம் கான்­கி­ரீட் குழாய்­க­ளைக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.அழிந்­து­போன நக­ரத்­தின் அடை­யா­ளக்­கூ­று­களில் ஒன்­றாக மிஞ்­சி­யுள்ள இந்­தத் தரைப்­பா­லத்தை சுற்­று­லாப் பய­ணி­கள் நேரில் வந்து பார்த்து புகைப்­ப­டம் எடுத்­துச் செல்­கின்­ற­னர். கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *