
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று 23.11.2022-ல் காவலர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது மூன்று வருடம் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை உள்ள 96 காவல்துறையினர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆயுதப்படையில் இருந்து தாலுக்கா காவல் நிலையத்திற்கு செல்லும் 28 காவலர்கள் என மொத்தம் 124 காவல்துறையினரிடம் பணியிட மாறுதல் தொடர்பாக விருப்ப மனு பெற்று பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அப்போது சட்டம் & ஒழுங்கு பணிக்கு புதிதாக செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 124 காவலர்துறையினரை நேரில் அழைத்து அவர்களை மாவட்ட காவல்நிலைய காலிப்பணியிடங்களுக்கேற்ப அவர்களின் விருப்பத்தின்படி பணியிடமாறுதல் வழங்கியதில் காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகார்த்திக்ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இரமேஷ், மாவட்ட தனிபிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவல் அலுவலக பணியார்கள் கலந்து கொண்டனர்..