
வேலூர்: வேலூர் மாங்காமண்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கர்ணன் அவர்களின் மனைவி சத்தியா 10நவம்பம்22 இன்று மதியம் பிரசவ வலியால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் தான் குழந்தை இறந்து விட்டதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது இதனை தொடர்ந்து வேலூர் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.