வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் யானை; மீட்புப் பணியில் வனத் துறையினர்.!

கோவை: வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அதன் அருகில் பெருங்கள்குத்து என்ற அனை திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த யானை தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கு இங்கும் சுற்றித் திரிந்தது. தகவல் அளித்து தற்போது கேரளா வனத்துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கு ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *