
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய நாள் ( பிப்.18 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
50% ஆசிரியர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு சென்றதால் முந்தைய நாளான வெள்ளிக்கிழமையும் (பிப்ரவரி 18) பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்விதுறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார்.
நகர்புற தேர்தல் நடக்கும் வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural news என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.