வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம்; மோடியை விமர்சித்து 2 ஆண்டு தண்டனை பெற்றதால் நடவடிக்கை !

வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவியை இழப்பார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் மூன்று மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது. இந்நிலையில்,வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் சுற்றிக்கை வெளியாகியுள்ளது. இதனால் எதிர் கட்சிகள் கடுமையான கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *