ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை அதிரடியாக விடுதலை செய்தது – உச்சநீதிமன்றம்.!

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்த நிலையில், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *