
மத்தியபிரதேசம்: போபால் டாக்டர்களின் அலட்சியத்தால், சிகிச்சை பெற முடியாமல் 5 வயது சிறுவன், தாயின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜபல்பூரைச் சேர்ந்த சஞ்சய் பாண்ட்ரே என்பவரின் 5 வயது மகனுக்கு, நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்றனர்.ஆனால், அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் யாரும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முன் வரவில்லை. இந்நிலையில், சிகிச்சை பெற முடியாத சிறுவன் தாயின் மடியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக
உயிரிழந்தான். இது பற்றி மருத்துவர்களிடம் விசாரித்தபோது, ‘என் மனைவி முந்தைய நாள் விரதம் இருந்ததால் சோர்வாக இருந்தார். ‘அதனால், அவரை கவனித்துவிட்டு மருத்துவமனைக்கு வர தாமதமாகிவிட்டது’ என அலட்சியமாக பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த புகாரின்படி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.