
மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்( வயது 38 )இவர் சக மீனவர்களுடன் நேற்று 19/02/2023 காலை வழக்கம் போல் விசைப்படையில் கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்பினார். அப்போது அவரது வலையில் ஒரு மர்ம பொருள் கிடைத்தது. இதனைப் பார்த்து அவர் இது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கும் என்று கருதி வனத்துறை காவல்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர் வலையில் சிக்கிய சுமார் 10 கிலோ எடையுள்ள மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கக்கூடும் ஆனாலும் இதனை முறையாக ஆய்வகத்தில் சோதனை செய்தால் மட்டுமே இதன் உண்மை தெரிய வரும். திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருந்தால் இதன் மதிப்பு சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அதிகாரிகள் திமிங்கலக் கழிவை ஆய்வுக்காக பத்திரமாக எடுத்து சென்றனர்.