மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து பழங்குடியின சமுகத்தினருடன் உள்துறை மந்திரி பேச்சுவார்த்தை.!

மொரிஹ் நகர்: மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது. இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டனர் கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு படையினரின் மூத்த அதிகாரிகளுடன் அமித்ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று குகி பழங்குடியின சமுகத்தினரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மணிப்பூரின் மொரிஹ் நகரில் நடந்த இந்த சந்திப்பின் போது குகி பழங்குடியினரின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மோதல் போக்கை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமித்ஷா கோரிக்கைவிடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *