
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளம் பெருகி ஓடுகிறது. மக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்து சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீட்புப்பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்தவர்கள் பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை.