நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு; தப்பிக்க முயன்றவரை பிடிக்க சென்ற வழக்கறிஞர் மீது ஆசிட் வீச்சு.!

கோவை: கோவை காவேரி நகர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சிவக்­கு­மார். இவ­ரது மனைவி கவிதா. கருத்து வேறு­பாட்­டால் இரு­வ­ரும் பிரிந்து வாழ்ந்து வரு­கின்­ற­னர்.கவிதா 2016ஆம் ஆண்­டில், பேருந்­தில் சக பய­ணி­யி­டம் இருந்து 10 பவுன் தங்க நகை­யைத் திரு­டிய வழக்­கில் கைது செய்­யப்­பட்டு பிணை­யில் வெளி­வந்­துள்­ளார். இந்த வழக்கு தொடர்­பான விசா­ர­ணைக்­காக நேற்று அவர் நீதி­மன்­றம் சென்­றி­ருந்­தார்.தன்­னை­யும் இரு குழந்­தை­களை­யும் பிரிந்து வாழும் கவி­தா­வி­டம் நீதி­மன்ற வளா­கத்­தில் வாக்­கு­வா­தம் செய்­தார் கண­வர் சிவா.நீதி­மன்ற வாயில் வரை அவ­ரைத் தொடர்ந்து சென்று அங்­கே­யும் வாக்­கு­வா­தத்­தைத் தொடர்ந்­தார். தங்­க­ளு­டன் வந்து வசிக்­கும்­படி வலி­யு­றுத்­தி­னார். கவிதா இதற்கு ஒப்­புக்­கொள்­ளா­த­தால் ஆட­வர் சின­ம­டைந்­ததாகத் தெரிகிறது. பின்­னர் பிளாஸ்­டிக் போத்­த­லில் மறைத்து வைத்­தி­ருந்த அமி­லத்தை கவி­தா­வின்­மேல் அவர் ஊற்­றி­னார்.உடல் முழு­வ­தும் அமி­லம் பர­வி­ய­தால் கவிதா அணிந்­தி­ருந்த சேலை முழு­வ­து­மாக எரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.அரு­கில் நின்­றி­ருந்த பெண் வழக்­க­றி­ஞர் ஒரு­வர் தனது கறுப்பு அங்­கி­யைக் கழற்றி கவிதா­மீது போர்த்த முயன்­ற­தா­க­வும் அந்த அங்­கி­யும் எரிந்­த­து­டன் வழக்­கறிஞரின் கையில் காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.அருகில் நின்ற மேலும் சில வழக்­க­றி­ஞர்­கள் ஆட­வ­ரின் செய­லைத் தடுக்க முயன்­ற­னர். அவர்­கள்­மீ­தும் அமி­லம் பட்­ட­தில் அவர்­க­ளுக்­குச் சிறிய அள­வில் காயங்­கள் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.சம்­ப­வத்தை அடுத்து ஆட­வர் அங்­கி­ருந்து தப்பி ஓட முயன்­றார்.ஆனால் நீதி­மன்ற வளா­கத்­தில் இருந்த வழக்­க­றி­ஞர்­கள் அவரை விரட்­டிச் சென்று பிடித்­த­து­டன் அடித்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. பின்­னர் அங்கு வந்த காவல்­து­றை­யி­ன­ரி­டம் ஆட­வரை ஒப்­ப­டைத்­த­னர்.சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த கவிதா உட­ன­டி­யாக சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்ளார்.தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­திற்­குச் சென்ற கோவை மாந­க­ரக் காவல்­துறைத் துணை ஆணை­யர் சந்­தீஷ் நேர­டி­யாக விசா­ரணை மேற்­கொண்­டார்.பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஆட­வர் தண்­ணீர் போத்­த­லில் அமி­லத்தை எடுத்து வந்­தது முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­த­தா­கக் கூறி­னார். தன்னோடு வந்து வசிக்க மனைவி ஒப்புக்கொள்ளாததால் அமிலம் வீசியதாக அவர் விசாரணையில் கூறியுள்ளார். விசா­ரணை தொடர்­கிறது.அமி­லம் வீசிய சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய இரு­வ­ரும் கண­வன்-மனைவி என்­ப­தும் பக­ல் நேரத்தில், நீதி­மன்ற வளா­கத்­தில் இத்­த­கைய சம்­ப­வம் நடந்­த­தும் அந்த வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *