
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அங்கு இரட்டை குவளை முறை மற்றும் கோவிலுக்குள் பட்டியல் மக்கள் செல்வதை தடுத்த இருவர் மீது வன்கொடுமை தடுப்பு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு அன்று இரவு புத்தாண்டு கொண்டாடுவது தடுத்ததாக புகார் எழுந்தது இந்த நிலையில் அதே மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியலினப் பெண்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன் அவர்களைத் தாக்க முயன்ற தீண்டாமை கொடுமைச் சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் மங்களநாடு கிராமத்தின் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மங்கள நாட்டில் டீக்கடை நடத்தி வந்த வெங்கடாசலம், அருள்ராஜ் ஆகிய இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்குள்வே தொடர்ந்து பல்வேறு தீண்டாமை கொடுமை நடந்து வரும் இந்த மாவட்டத்தை இதுவரை தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளாததும் இது தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தாததும் ஆதிராவிடர் பழங்குடி மக்களுக்கான அரசு இது இல்லை என்றும் அரசியல் கட்சியினர் மற்றும் தலித் சமூக ஆர்வலர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.