திருவெண்ணெய்நல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மின்னல் தாக்கி ஒரு பெண் இரண்டு மாடுகள் உயிரிழப்பு.!

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மனைவி ராஜேஸ்வரி. இவர் தனது பசுமாட்டை நேற்று 24/04/23 அன்று காலை மேய்ச்சலுக்காக ஏாியில் விட்டு இருந்தார். பின்னர் மாலை 3 மணியளவில் அந்த மாட்டை அவர், மீண்டும் வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் மின்னல் தாக்கியதில் கொத்தனூரை சேர்ந்த பலராமன் மனைவி பூங்கொடி என்பவருக்கு சொந்தமான ஒரு மாடு, துலுக்கப்பாளையத்தை சேர்ந்த தேசிகன் என்பவருக்கு சொந்தமான ஒரு மாடு என இரண்டு மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளது இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் துணை காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *