தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை விழுப்புரத்தில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியர் தகவல்.!

விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :- விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெற, சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமும், காலாண்டுதோறும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20-ந் தேதி) சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 18 முதல் 30 வயது வரையுள்ள வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனு தாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் எனவும் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *