
ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி. இச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததில், 8 மாத கர்ப்பமாக உள்ளார். அவரது புகாரில், ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த, ஆயுதப்படை காவலர் பிரபாகரன், 30, என்பவர், அங்கிருந்து, பைக் மூலமாக, நண்பருடன் தப்பியோடியுள்ளார். அவரை பின் தொடர்ந்து, ஆத்தூர் மகளிர் காவலர்கள் விரட்டிச் சென்றும் பிடிபடவில்லை. தொடர்ந்து, ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையிலான டவுன் மற்றும் ஊரக காவல்துறையினர், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.