சூட்கேசில் பெண் சடலம் ஒருவர் கைது; கணவருக்கு போலீஸ் வலைவீச்சு.!

திருப்பூர் தாராபுரம் அருகே உள்ள சாலையின் ஓரம் உள்ள கால்வாயில்,சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு சூட்கேசை திறந்து பார்த்தபோது அந்த சூட்கேசுக்குள் 30 முதல் 35 வயதிற்குள் மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருந்துள்ளது.உடனடியாக பெண்ணின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதில், சூட்கேஸை இருவர் கொண்டு வந்தது தெரியவந்தது.அடுத்த அந்த பெண் வசித்து வந்த வீடு பற்றி தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், தாராபுரம் சாலை அருகே சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெய்லால் சவ்ரா (27) என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

காவல் ஆய்வாளர் சரவணன் ரவி தலைமையிலான தனிப்படை ஓசூரில் வைத்து கைது செய்த‌து. மேலும், உயிரிழந்த பெண்ணின் கணவர் அபிஜித் தாசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *