
சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் 56 பேர் முறையான முன் அறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்த விவகாரத்தில் ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி,உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர்,திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.காரல்மாக்ஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கை அக்.27-க்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்.