பேருந்துநிறுத்தத்தில் மாணவிக்கு மாணவன் மஞ்சள் தாலி கயிறு கட்டிய விவகாரம்; உயர் நீதிமன்றம் கண்டனம்.!

சென்னை: சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சீருடையில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியது சமூக வலைதளங்களில் பரவியது இதனை அடுத்து சிதம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கும் உயர்நீதிமன்றம் கண்டனம். மகளை மீட்டு தரக் கோரி பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி. அரசு காப்பகத்தில் உள்ள மாணவியை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அவசர கதியில் மாணவியை தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம். மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு உத்தரவு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *