கேஸ் சிலிண்டர் வெடித்து : ரஷ்யாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒன்பது பேர் பலி.!

மாஸ்கோ: ரஷ்யாவின் அடுக்கு மாடிகுடியிருப்பில் நடந்த கோஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ஷாக்லீன் தீவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இது குறித்து அம்மாகாண கவர்னர் வலோரி லிமாரென்கோ கூறுகையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 1980 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.முதற்கட்ட தகவலன்படி காஸ் கசிவு காரணமாக நடந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 33 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *