
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆதனூர் கிராமத்தில் 09 டிசம்பர் 22 ல் குரங்கு மின் கம்பி மீது தாவி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத நிலையில் திடீரென்று மின்கம்பி உரசல் ஏற்பட்டு தீப்பொறி கூரை விட்டு மேல் விழுந்து தீ பற்றி 2 வீடு பற்றி எறிந்தது. இதனால் கூரை வீட்டிலிருந்த சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்ததனால் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் இருந்து தீ கரியாக ஆகின இதனை தொடர்ந்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீ அணைப்பு துறையினர் தீ அனைத்து பதிக்கப்பட்ட சேதங்களை ஆய்வு செய்தனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்கி உடனடியாக புதிய வீடு கட்டுவதற்கு ஆணையம் வழங்கிட தீ விபத்துக்கு காரணமான குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.