குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது- தலைமைச் செயலாளர் இறையன்பு.!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சாதி தீண்டாமை நடைபெற்றது வருகிறது இந்த நிலையில் குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது உள்ளிட்ட 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டங்கள் முடிந்ததும், பிரச்சினையின்றி முடிந்ததா என உறுதி செய்ய வேண்டும். உரிய ஆதாரங்களை புகைப்படத்துடன் அரசுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா, எந்தவித புகாருமின்றி இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயளாலர் இறையன்பு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *