காங்கிரஸ், பாஜக கட்சிகள் தலித்களுக்கு எதிரானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு.!

இமாச்சலப்பிரதேசம்,சோலன்:

இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் 53 வேட்பாளர்களை ஆதரித்து (BSP) தேசியத் தலைவர் மாயாவதி நேற்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பல லட்சக்கணக்கான மக்களுடன் கலந்து கொண்ட பொது கூட்டத்தில் உரையாற்றிய மாயாவதி, “காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் தலித் விரோதிகள் என்றும், மத்தியிலும் மாநிலத்திலும் 75 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்தவில்லை” என்றார். இரு கட்சிகளாலும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பெரிய மாநிலங்களில் அதிகாரத்தை பாஜகவும் காங்கிரஸும் பகிர்ந்து கொண்டன, ஆனால் அவை தலித்துகளின் நிலைமைகளை மேம்படுத்தத் தவறிவிட்டன,” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு வேலைகளில் இடஒதுக்கீடு குறைந்து வருவதாகவும், இரு தரப்பினரும் இடஒதுக்கீடு பதவியை நிரப்பவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாற்றத்தை கொண்டு வர இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மாயாவதி அவர்கள் மக்களை வலியுறுத்தினார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி உத்திரபிரதேச நான்கு முறை ஆட்சி சிறப்பாக நடைபெற்றது அதேபோல் இங்கும் சிறப்பாக ஆட்சி அமையும் என்றும் ஆப்பிள் சாகுபடியை இமாச்சல பிரதேச விவசாயிகளும் சார்ந்திருப்பதை கருத்தில் கொண்டு, ராப் நிறுவனத்தை சில பெரிய வணிகக் குழுக்கள் குறைந்த விலையில் வாங்குவதாகவும்,அதன்பின்னர் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக வரும் செய்தி உண்மையாக இருந்தால், அது குறித்து அரசு கவனத்தில் கொண்டு, விவசாயிகளை சுரண்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். என்றும் தேசிய தலைவர் மாயாவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *