கந்து வெட்டியை விட மோசமான உயிரை கொல்லும் மைக்ரோ பைனான்ஸ்? நடவடிக்கை எடுக்குமா மத்திய மாநில அரசுகள்.!

வட்டி போன்ற சட்டத்துக்குப் புறம்பானவற்றில் மாட்டிக் கொண்டவர்கள் ஒருபுறம் என்றால், சட்டப்படியான நுண்நிதி நிறுவனங்கள், (Micro finance), தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் கடன் பெற்று செலுத்த முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் மறுபுறம்.இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் காவல் எல்லைக்குட்பட்ட நேதாஜி நகரில் குடியிருந்து வரும் பால்ராஜ் தந்தை உத்தரகுமார் அரூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனமான பாரத் பைனான்ஸ் லிமிடெட் இல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு வகையான கடன் பெற்று மாதந்தோறும் ரூபாய் 2,600 மட்டுமே கட்ட வேண்டிய தவணையை தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் கூடுதலாக இவரிடம் ரூபாய் 200 சேர்த்து வசூல் செய்ததாக கூறப்படுகிறதுபிறகு அந்த ஊழியர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர் வெங்கடேஷ் என்பவர் உத்திரகுமாரிடம் தாங்கள் ரூ. 2600 செலுத்த வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

மாதம் தோறும் நான் ரூபாய் 2800 கட்டி வருவதாகவும் நீங்கள் 2600 கட்ட சொல்லி கேட்கிறீர்கள் என கூற செல்போனில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று காலை நிதி நிறுவனத்திற்கு வருமாறு தகவல் அளித்ததின் பேரில் அலுவலகத்திற்குசென்ற உத்தர குமார் தவணை கட்டியதற்கான குறிப்பு கேட்டபோது நிதி நிறுவன மேலாளர் மாரியப்பன் மற்றும் சக ஊழியர்கள் உத்தரகுமாரை தகாத வார்த்தையால் திட்டியும் அவமானப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உத்தரகுமார் மகன் பால்ராஜ் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர்சிறிது நேரம் கழித்து தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து தந்தை இறந்து விட்டதாக அவரது நண்பர் ஒருவர் மூலமாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அரை மணி நேரத்திற்கு முன்பாகவே உத்தர குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அடக்கம் செய்வதற்காக நேற்று அவரது சொந்த கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமாள் நாயக்கன்பட்டி கிராமத்தில் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

அதன் பிறகு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலை அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இது போன்ற பல்வேறு தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இது போன்ற நிதி நிறுவனங்களை முற்றிலும் ஒழித்து அரசு நிறுவனங்களில் ஏழை எளிய மக்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியினார் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *