கணவன் இறந்த சோகத்தில் மகன்களுடன் மனைவி தற்கொலை முயற்சி – 2 மகன்கள் உயிரிழப்பு..!!

தஞ்சை: பூதலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளோடுதாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பூதலூர் அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – சத்யா தம்பதியர். இவர்களுக்கு முகேஷ் (7) நித்திஷ் (5) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கணவர் விஜயகுமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.இதையடுத்து கணவர் இறந்த துயரத்தில் மனம் வெறுத்த சத்யா, தனது இரண்டு குழந்தைகளுக்கும் வயல்களில் தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு தானும் குடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இவரது மகன் வீட்டிலிருந்து வெளியே வந்து வாந்தி எடுத்துள்ளார்.அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சத்யா, கையில் வைத்திருந்த மருந்து பாட்டிலை தட்டிவிட்டு மூன்று பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மகன்கள் முகேஷ், நித்திஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து சத்யா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *