ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தையை வறுமை நிலையில் விட்டு சென்ற பெற்றோர்கள்; மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கடந்த மாதம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த அக்:20ல் ஒரே பிரசவத்தில், மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளை பராமரிக்க முடியாத வறுமை சூழல் இருப்பதாக, குழந்தையின் குடும்பத்தினர், மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்தனர். அவர் அறிவுரை வழங்கினார். ஆனால், அவர்கள் வளர்க்க முடியாத நிலையை மீண்டும் தெரிவித்து, குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்றனர். இதனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 10 நாட்களுக்கும் மேலாக, எடை குறைந்து பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று, மூன்று பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்கள் குழந்தைகளை பார்வையிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் வழங்கினார். மேலும், குழந்தைகளை சிறந்த முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார். இதில், மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரம் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *