ஒரே இடத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல்.!

டெல்லி: வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று முன்தினம் வலுவடைந்தது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி, நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனை தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும். ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் எதிரொலியால் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *