ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆதரவு அளிக்க வேண்டும்- இந்திய அரசுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள்.!

மாஸ்கோ,உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷியா விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைனில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் தெரிவித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் முக்கியமான நடவடிக்கை கோரி தீர்மானம் எதுவும் கொண்டு வந்தால், ரஷியாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு ரஷிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த தீர்மானம் பற்றி டெல்லியில் உள்ள மூத்த ரஷிய தூதர் பாபுஷ்கின் கூறுகையில், “எங்கள் இந்திய கூட்டாளிகள் ரஷியாவை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.இந்த தீர்மானம் எப்படி இறுதி வடிவம் பெறுகிறது என்பதைப் பொருத்து, இந்தியா தனது நிலைப்பாட்டை முடிவு செய்யும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்லா நேற்று தெரிவித்தார். வரைவு தீர்மானத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *