
புதுடெல்லி: எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் ஏமாற்றமே மிஞ்சியது… புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை மர்மநபர்கள் சிலர் கடந்த டிசம்பர் 26ம் கலந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான தமிழக அரசு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது ஆனால் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை.? இதனால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பண்ருட்டியை சேர்ந்த மார்க்கஸ் ரவீந்தரன் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசு தவறிவிட்டது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் இருக்கும் போது உச்ச நீதிமன்றம் இதில் ஏன் தலையிட வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், மனுதாரர் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றம் நாடலாம் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் வழக்கறிஞர்களும் வேங்கைவயல் கிராம மக்களும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.