
சென்னை: உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சென்னையில் உள்ள ரஷ்ய நிறுவனங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை சாந்தோமில் உள்ள ரஷ்ய துணை தூதரக அலுவலகத்திற்கு வழக்கமான 2 உதவி ஆய்வாளர், 10 காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்திற்கு பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.