ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.!

ஈரோடு: பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பாலக்கரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெறும் கைகளில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். தலைமை ஆசிரியையிடம் முறையிட்டும் தொடர்ந்து இதே செயலில் ஈடுபடுத்தியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்து வேதனை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *