இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்; தமிழகத்தில் 14.4% பேர் பாதிப்பு என ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்.!

புதுடெல்லி: இந்தியர்கள் ஆரோக்கியம் பற்றிய ஆய்வை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ( ICMR) சேர்ந்து நடத்தின. இந்த ஆய்வு கட்டுரை இங்கிலாந்து நாட்டில் வெளியாகிற ‘தி லேன்செட் டயாபடீஸ் அண்ட் எண்டாகிரினாலஜி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

அதன் முக்கிய தகவல்கள் பின் வருமாறு:-

  • இந்தியாவில் 2019-ம் ஆண்டு 7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இங்கு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
  • இந்தியாவில் நீரிழிவு பாதித்தோர் விகிதம் 11.4 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் ரத்தக்கொதிப்பு என்று அழைக்கப்படுகிற உயர் ரத்த அழுத்த பாதிப்பு விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது.உடல் பருமன், தொப்பை
  • இந்தியாவில் உடல் பருமன் பாதிப்பு விகிதம் 28.6 சதவீதம், வயிறு பருமன் (தொப்பை) உடையவர்கள் விகிதம் 39.5 சதவீதமாக இருக்கிறது.
  • நம் நாட்டில் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ‘பிரி டயாபடீஸ்’ என்ற பிரச்சினை 15.3 சதவீதத்தினருக்கு உள்ளது.
  • நாட்டில் 81.2 சதவீதம் பேருக்கு ‘டிஸ்லிபிடேமியா’ பிரச்சினை உள்ளது. அதாவது இவர்களுக்கு கொழுப்பு, எல்.டி.எல். என்று அழைக்கப்படுகிற கெட்ட கொழுப்பு, எச்.டி.எல். என்னும் நல்ல கொழுப்பு, டிரைகிளிசரைடுகள் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கிற நிலை உள்ளது.
  • நமது நாட்டில் கோவாவில்தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 26.4 சதவீதத்தினருக்கு நீரிழிவு உள்ளது. 20.3 சதவீதத்தினருக்கு ‘பிரி டயாபடீஸ்’ இருக்கிறது.தமிழ்நாட்டில் 14.4 சதவீதம்
  • தமிழ்நாட்டில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. ‘பிரி டயாபடீஸ்’ 10.2 சதவீதத்தினருக்கு இருக்கிறது.
  • ‘பிரி டயாபடீஸ்’ பிரச்சினைக்கு ஆளாகிறவர்களில் 3-ல் ஒருவருக்கு சில ஆண்டுகளிலேயே நீரிழிவு பாதிக்கிறது.
  • நீரிழிவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் கோவா, புதுச்சேரி, கேரளா, சண்டிகார், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், சிக்கிம், பஞ்சாப், அரியானா ஆகியவை இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *